கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காளிங்கவரம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் கடந்த பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் நிலத்தின் அருகில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் வனத்துறையினருக்கு சொந்தமான அரசு புறம் போக்கு நிலமும் உள்ளது.
இந்த நிலத்தினை அடையாளம் தெரியாத நபர்கள் அந்த நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து இரவு, பகலாக அந்த நிலத்தில் உள்ள அரிய வகை மரங்களை பெல்லைன் இயந்திரம் மூலம் வெட்டி சாய்த்து வருகின்றனர்.
இது குறித்து தட்டிக்கேட்டால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததோடு உங்களுடைய நிலத்தினையும் கொடுத்து விட்டு தப்பி சென்று விடுங்கல் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது,
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சூளகிரி காவல்நிலையம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகார் மனுக்கள் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, தொடர்ந்து எங்களுக்கு தொல்லை கொடுத்து வரும் நபர்கள்
மீது உரிய நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள அரசு புறம் போக்கு நிலத்தின மீட்க உரியநடவடிக்கை எடுக்க வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை சந்தித்து புகார் மனுவினைக் கெடுத்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் நாங்கள் கடந்த பல தலைமுறைகளாக
காளிங்கவரம் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம், இந்த நிலையில் அரசுக்கு சொந்த மான மூண்று ஏக்கர் நித்தினை ஆக்கிரமிப்பு செய்ததேடு எங்களது நிலத்தினையும் ஆக்கிரமிப்பு செய்து விடுவதாக மிரட்டி சிலர் வருகிறனர், அடையாளம் தெரியாத வெளி மாநில நபர்கள் மீது உரிய மீது நடவடிக்கை எடுத்து அரசு நிலத்தினை மீட்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அரசு நிலத்தினையும் குறி வைத்து ஆக்கிரமிப்பு செய்யும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது.



