கிருஷ்ணகிரி, மே 9 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சுவை மிகுந்த பங்கனப்பள்ளி, பித்தர், பல்கோவா, மல்லிகா, காதர் என பல்வேறு வகையான மாங்கனிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் மாங்காய்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டைப்போலவே இத்த ஆண்டும் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தமிழக விவசயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் மா விவசாயிகள் மாங்காய்கு உரிய விலை நிர்ணையம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் இராமகவுண்டர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42,000 ஹெக்டரில் இருந்து வறட்சியின் காரணமாகவும் மாங்காய் விலை இன்மையின் காரணமாகவும் சுமார் 7000 ஏக்கர் மாமரங்களை விவசாயிகள் எடுத்துவிட்டு மாற்று பயிருக்கு சென்று விட்டனர். காரணம் அண்டை மாநிலங்களில் மாங்காய் விலை குறைந்த பொழுது அண்டை மாநில அரசுகள் ஒரு டன்னுக்கு ரூ.15,000 வரை மானியம் வழங்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் இது வழங்கப்படவில்லை இதனால் மா விவசாயிகள் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர்.
மேலும் சென்ற ஆண்டு மா விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு ஒரு தலை பட்சமாக வழங்கி உள்ளது உண்மையான மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர்.
தற்பொழுது அமைய உள்ள புதியஅரசு மா விவசாயிகளுக்கு மா பயிரிட மானியங்கள் உயர்த்தி பணமாக வழங்க வேண்டும். மா வளர்ச்சி வாரியம் அமைத்து ஏக்கர் ஒன்றுக்கு 30,000 உற்பத்தி மானியம் வழங்கப்பட வேண்டும்.
இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 75 மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில் 7 தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுத்து உள்ளனர் அனைத்து தொழிற்சாலைகளையும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஆலங்கட்டி மழை சூறைக்காற்றால் ஏற்பட்டிருக்கும் இழப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும். காய்ந்து போகும் மாமரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மா நடவுக்கு ஏற்றார் போல் சொட்டு நீர் பாசனம் அமைக்க திருத்தம் செய்து குழாய் வழி நீர் அமைக்க அனைவருக்கும் முழு மானியம் வழங்க வேண்டும்.
மேலும் இந்த ஆண்டு வறட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய இலவச மின் மோட்டாரில் இருந்து டாக்டர் டேங்கரில் தண்ணீர் பிடித்து தொலைதூரத்தில் உள்ள மா தோட்டங்களை காப்பாற்ற எடுத்து செல்வதை மின்வாரிய ஸ்கோர்டு பிடிக்கக் கூடாது என மின்துறைக்கு ஆலோசனை வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.
அப்போது சங்கத்தின் ஆலோசகர் கண்ணய்யா, மாவட்ட பொதுச் செயலாளர் அனுமந்தராசு, மாவட்ட நிர்வாகிகள் வரதராஜன், கண்ணப்பன், கோவிந்தராஜ், முனுசாமி, திம்மராயன், சின்னசாமி, முனிரத்தினம், குறட்டை முருகேசன், ஜி.வெங்கடேசன், முனியப்பன், சந்தரப்பா, மாதையன், கே.சிவசங்கரன், ஜலபதி, தேவன், குமரன், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



