சிவகங்கை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைகழக கூட்டரங்கில் நடைபெற்ற உலக புறவுலக சிந்தனையற்றோர்கான (ஆட்டிசம்) விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை சிறப்புப்பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தொடங்கி வைத்தார். உடன் பேராசிரியர் மற்றும் தலைவர் சிறப்புக்கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை டாக்டர்.சுஜாதாமாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



