சிவகங்கை:ஏப்:04
சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து பணியாற்றி வரும் செந்தில்வேல் என்பவரை முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தாக்கியதையடுத்து காலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ஓ. எல். ஜானகிராமன், சங்க செயலாளர் சித்திரைச்சாமி, சங்கப் பொருளாளர் எஸ். வல்மீகிநாதன், இணைச்செயலாளர் நிரூபன் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை ஏடிஎஸ்பி கதிரவன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைச்சாமி,
உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



