கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளராக ஒருவர் மட்டும் இருந்த நிலையில் தற்பொழுது 17 வார்டுகள் உள்ளதால் வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சி பணி செய்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை கட்சி ஆனைக்கினங்க, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மேகநாதன், உழவர் பேரிக்க மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி, சமூகஊடக பேரவையின் மாநில துணை தலைவரும் மாவட்ட கவுன்சிலருமான வழக்கறிஞர் மூர்த்தி, மாவட்ட தலைவர் அண்ணாமலை, பேரூராட்சி கவுன்சிலர் குமரேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளியரசு, அருண், சித்தார்த், மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில்
ஊத்தங்கரை தெற்கு மற்றும் வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது, இதில் தெற்கு நகர செயலாளராக பாஸ்கர், வடக்கு நகர செயலாளராக ஜிம் ராஜ்குமார் நியமனம் செய்து இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



