கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் 6.65 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மகளிர் தொழில் கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இத்தொழில் கூடம் முழுவதுமாக பெண்களால் நடத்தப்படுகிறது.
இதில் பழச்சாறு, தானிய வகை பிஸ்கட், முருங்கை, தேன், ஊறுகாய், உலர் மீன், மூலிகை பொடிகள், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த தயாரிப்புகளை வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு விநியோகிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சிட்கோ கண்காணிப்பாளர் மாரியம்மாள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.