சிவகங்கை மாவட்டம், தலைமை தேர்தல் அலுவலர்
அவர்களின் அறிவுரையின்படி, தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துக்கழுவன், தேர்தல் வட்டாட்சியர் மேசியாதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



