தஞ்சாவூர் மார்ச் 19.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் பழங்குடி மக்கள் ஆய்வு மையம் மற்றும் விழா ஒருங்கி ணைப்பு குழு சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் அமுதா, பாரத ஜோதி தலைமை வகித்தனர்.பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம், பழங்குடி மக்கள் ஆய்வு மைய தலைவர் சிவராமன், பிள்ளையார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதய குமார், நரிக்குறவர் பழங்குடி நல சங்க இயக்குனர் சீத்தா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் ரோசி சிறப்புரையாற்றினர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.
இவ்விழாவில் ஒருங்கிணைப் பாளர்களான முனைவர் இந்து, முனைவர் பவானி உதவியாளர் இராமலக்ஷ்மி இளநிலை உதவி யாளர்கள் தனலட்சுமி, கஸ்தூரி, கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



