நாகர்கோவில் – மார்ச் – 15,
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்க்கு உட்பட்ட செண்பகராமன் புதூர் பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் இருந்து விவசாயத்திற்க்கு வண்டல் மண் எடுப்பதற்க்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதாகவும், அதை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு இடங்களில் பயன்படுத்துவதாகவும் , மற்றும் வண்டல் மண் அள்ளும் குளத்தில் அரசு அதிகாரிகள் குளத்திற்க்கு நடை சீட்டு வழங்குவதற்க்கு முன்பே அதிகாலை ஆறு மணிக்கே ஒருவருக்கொருவர் போட்டி, போட்டு மண் எடுக்க துவங்குவதும், பின்பு தகவல் தெரிந்து அதிகாரிகள் சம்பவ இடம் வந்து எச்சரித்து செல்வதும் , வாடிக்கையாக உள்ளது. இதனிடையே எவ்வித அனுமதியும் பெறாமல் , அரசியல் வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் பெயரைக் கூறி விவசாயிகளுக்கு போட்டியாக எவ்வித அனுமதியும் இல்லாமல் குளத்தில் ராட்சத இயந்திரங்கள் மூலம் மண் அள்ளுவதற்க்கு என்று ஒரு கும்பல் மண் அள்ளி செல்வதாக கூறி முறையாக அனுமதி , மற்றும் நடை சீட்டு பெற்று வண்டல் மண் அள்ளும் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்ப்படுத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் , காவல் துறைக்கும் தொலைபேசியில் தகவல் அளிப்பதின் மூலம் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்று கருதி அதிகாலை முதலே அதிகாரிகள் குளங்களுக்கு வர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று இதே சம்பவம் தொடர்ந்ததால் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா ஆதிச்சன்புதூர் குளத்தில் முறையாக வண்டல் மண் அள்ளப்படுகிறதா ? அளவுக்கு அதிகமாக டெம்போக்களில் வண்டல் மண் ஏற்றப்படுகிறதா ? விதிமுறைகளை மீறப்படுகிறதா ? என குளத்தில் இறங்கி கரைகளில் மண் எடுக்கப்பட்டுள்ளதா ? ஒரே பகுதியில் அதிக அளத்தில் மண்கள் அள்ளப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு மேற்க் கொண்டு டெம்போ ஒட்டுனர்நர்களிடம் முறையான நடை சீட்டு பெறாமல் , வாகனங்களை தார்பாய் கொண்டு மூடாமல் மண் எடுத்து கொண்டு சாலையில் அதி வேகத்தில் செல்ல கூடாது என்று உத்தரவிட்டு சென்றார்.