கன்னியாகுமரி மார்ச் 11
குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்த ஜேம்ஸ் டவுணை சேர்ந்த சொர்ணப்பனுக்கு ரத்தின கவி விருது வழங்கப்பட்டது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் இளம் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் நூறு கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதைகள் பாடினார். அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகரும், கவிஞருமான ஐ. சொர்ணப்பன் சிறந்த கவிஞராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரத்தின கவி விருது வழங்கப்பட்டது.