அஞ்சுகிராமம் மார்ச் – 8
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மற்றும் கிராமங்கள் வரை அதிகளவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையின் உத்தரவையடுத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் கே.டி. உதயம் தலைமையில் வட்டார தலைவர்கள் தங்கம் நடேசன், வக்கீல் சேம் சுரேஷ்குமார், டேனியல், முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் குமரி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சகாயராஜ் தீவிர முயற்சியில் புதிய உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்து ‘வருகிறார்கள். இந்நிலையில் அமைப்பு செயலாளர் சாமுவேல் சேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜிலியஸ், மாநில பேச்சாளர் அந்தோணிமுத்து, குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் கே.டி.உதயம் முன்னிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒருங்கினைப்பாளர் எஸ்.கே.டி.பி. காமராஜ் அவர்கள் குலசேகரபுரம் காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோவை நியமித்து, சான்றிதழை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம்,நகர தலைவர்கள் மயிலாடி நடேசன், மருங்கூர் ஹெலன், முன்னாள் ஐ.என்டி யு.சி தலைவர் ஹென்றரி உள்ளனர்