தேனி
இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோவில்பாறை மலை அடிவாரத்தில்
மணி மற்றும் கருப்பையா என்ற இரண்டு விவசாயிகள் பலத்த காயங்களுடன் சடலமாக கடந்த 26 ஆம் தேதி மீட்கப்பட்ட சம்பவத்தில்
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இரண்டு விவசாயிகளும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது .
விவசாயிகள் இருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆண்டிப்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் 4 தனி படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் மேலும் கொலைக்கு தொடர்புடைய கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான கருப்புசாமி என்பவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
இரட்டை கொலை சம்பவத்தில் பலியான இருவரின் உறவினர்கள் இருவர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.