கிருஷ்ணகிரி,பிப்.28- கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில்,உதவி கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் அறிவுரத்திலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் உட் கோட்டம் பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து கராத்தே பயிற்சி விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் துணை ஆய்வாளர் எஸ்.ஐ.சந்திரா, எஸ் .எஸ்.ஐ. சோபியா, எஸ் எஸ் ஐ கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் கராத்தே மாஸ்டர் கவிதா மாணவிகளுக்கு தற் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தார். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.



