திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மோகனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பூண்டி வட்டார கல்வி அலுவலர் பூவராகமூர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிமாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் மாணவியர்களின் நடனம் மற்றும் நாடகச், சொற்பொழிவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவில் தனியார் தொண்டு நிறுவனத் தலைவர் சீனிவாசன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக பள்ளி மாணவ மாணவியருடன் ஆசிரியைகள் சேர்ந்து மேடையில் நடனமாடி மாணவ மாணவியர்கள் பெற்றோர்களை மகிழ்வித்தனர். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மஞ்சாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியைகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.