சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மற்றும் இளையாங்குடி சிட்டி லயன்ஸ் கிளப், ஆயிர வைசிய சபை, இளையான்குடி தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் இளையான்குடி ஆயிர வைசிய சபை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை
இளையான்குடி வட்டாட்சியர் முருகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள். தலைவர் லயன் செல்வராஜ், செயலாளர் லயன் மீரா உசேன், பொருளாளர் லயன் ஷேக் உதுமான், நிர்வாக அலுவலர் லயன் சாகுல் ஹமீது, லயன் கோபி,லயன் டாக்டர் ஆபிதீன் மற்றும் தன்னார்வலர்கள் அப்துல் மாலிக், ராஜு, இன்னாசி ராஜா, மற்றும் ஆயிர வைசிய சபை தலைவர் சதாசிவம், அம்மன் கோவில் அறங்காவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் மஞ்சப்பையில் விநியோகம் செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தன்னார்வலர் அப்துல் மாலிக் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.



