கோவை அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை மாவட்டக் கண்காணிப்பாளர் எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது
கோவை அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் பாஜக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.18.5 லட்சம் ரொக்கம், 9 சவரன் ஆபரணங்களை மர்ம நபர்கள் திருடிய அதைத் தொடர்ந்து பத்ரி நாராயணன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளி அன்பரசன் (33) திருவாரூர், இவர் கருமத்தம்பட்டி பகுதியில் தனியாக வீடு ஒன்று எடுத்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். பிஜேபி பிரமுகர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்த நிலையில் போலீசார் ஆய்வு செய்ததில் கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்த நிலையில் குற்றவாளியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து குற்றவாளி இது போன்ற மேலும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.



