தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நெய் தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை பழ தீபம், ஷாம்பூசணிக்காய் தீபம் ஆகிய தீபங்களை ஏற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். திருக்கோவில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



