மதுரை பிப்ரவரி 12,
மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா
மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி. மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின் போது மதுரை மாவட்டஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.