நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மூன்று நாட்களாக பற்றி எரியும் தீயினை அணைக்கும் பணி நடைபெறுவரும் நிலையில் நேற்று அஇஅதிமுக சார்பில் குமரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்.ஜி சுகுமாரன் தலைமையில் நாகர்கோவில் மாநகர கிழக்குப் பகுதி செயலாளர் வழக்கறிஞர் KLS. ஜெயகோபால் மற்றும் மாமன்ற உறுப்பினரும்,இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளருமான.அக்ஷயா கண்ணன் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வைகுண்டமணி உள்ளிட்டோ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் மேலும் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.



