தூத்துக்குடியில் விபத்தில் உடல் உறுப்பு இழந்தவர்கள் நல உதவி வழங்குதல். தூத்துக்குடியில் பைக் விபத்தில் கை, கால்களும் செயல் இழந்த நிலையில் மருத் துவ சிகிச்சைக்காக வீட்டை விற்று, வீட்டை இழந்த நிலையில் சிகிச்சை பெற பணம் இல்லாத நிலையில் கஷ்டப்பட்ட அஜித்குமார் அவரது மனைவி, இரண்டு பெண் குழந் தைகளுக்கும் உதவிகள் வழஙகப்பட்டது.
அஜித்குமாருக்கு இரும்பு கட்டில் மற்றும் மெத்தையும் மேலும் வியாபாரம் மூலம் சம்பாதிக்க பேன்ஸி பொருட்கள் பொம்மைகள் வாங்குவதற்கு பண உதவி,தரை விரிப்பு மற்றும் குடும்பக் செலவுக்கு பணம் அளிக்கப்பட்டது
மெக்கானிக் என்பதால் பழுது பார்க்க தெரிந்த அவருக்கு சொந்தமாக தொழில் செய்ய பீச் பெரிய குடை வழங்கப்பட்டது
அது போல் விபத்தில் இடதுகாலை இழந்த மாற்றுத்திறனா ளிக்கு உடல் வலிமை பெற பயிற்சி செய்ய இரண்டு டம்புள்ஸ் வழங்கப்பட்டது.இந்த உதவியை அன்னை ஜுவல்லரி பிரபு ராஜ், தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் இசக்கி,
காட்வின் செல்லப்பா, ஞான ஒளி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹென்றிஸ் டீபன்சன், கோஸ்டல் பவர் பிளான்ட் நாம தேவன், பாஸ்கர், அடையல், கோயில்துரை, பாலசிங், ஆறுமுகநேரி சித்ரா, ஜோன்ஸ் ரூபன் சாமுவேல் பாலாஜி ஆகியோர் நல உதவிகள் வழங்கினார்கள்