ஊத்தங்கரை,ஜன.28: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தாலி தொலைந்து விட்டதாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சத்யா(30). என்பவர் புகார் அளித்தார், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மோகன், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அனுமந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் திங்கள்கிழமை கோயிலுக்கு வந்த சத்யா பிரபு தம்பதியினர், கோயிலுக்கு வந்து புனித நீராடி ஆடையை அங்கேயே கழற்றி விட்டு மாற்று துணியை மாற்றும் போது அவர் கழட்டிய துணியில், அவரது தாலியும் சேர்ந்து சென்றது தெரியவில்லை. இந்த நிலையில் சாமியை தரிசனம் செய்து விட்டு பார்த்தபோது கழுத்தில் தாலி இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்த பெண். ஆடையை மாற்றிய பகுதியில் போய் தேடிப் பார்த்த போது, அங்கு தாலி இல்லாததை கண்டு பெண் கதறி அழுந்துள்ளார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தும் கிடைக்காத நிலையில், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மோகன் அப்பகுதியில் ஆற்று நீரில் காணிக்கை செலுத்தும் சில்லறை காசுகளை கண்ணில் கண்ணாடி அணிவித்து நீருக்குள் சென்று எடுக்கும் நபர்களை விசாரித்துள்ளார். மேலும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அவர்களிடம் யார் எடுத்தார்கள் என்பதை கண்டுபிடித்து தர கூறி வந்த நிலையில், தாலியை எடுத்த நபர்கள் காவல் அறங்காவலர் குழு தலைவர் சந்தான லட்சுமியிடம் ஒப்படைத்துள்ளனர். தாலி கிடைத்தால் போதும் யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என புகார் கூறியதன் பேரில், அறங்காவலர் குழு தலைவர் காவல் உதவி ஆய்வாளர் மோகன் அவர்களிடம் தாலியை ஒப்படைத்தார். சத்யா பிரபு தம்பதியினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர் தாலியை பெற்ற பெண் காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.
கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics