ராமநாதபுரம், ஜன.28-
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டி அன்பாலயா உண்டு உறைவிட பள்ளியில் ஒரு வருடத்திற்கு முன்பு இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாலசுந்தரம் மூலமாக தொண்டி அன்பாலயா அறக்கட்டளையில் ஒப்படைக்கப் பட்டு s சர்மிளா என்ற மாற்றுத்திறனாளி தமுமுகவின் உதவியால் பெற்றோரிடம் ஒப்படைப்பு செய்தனர்.
மாற்றுத்திறனாளி சர்மிளா தந்தைபெயர் சேரிப். தாயார் பெயர் நஜிமா தொண்டி அன்பாலயா சிறப்புப் பள்ளியில் ஒரு வருட காலங்களாக இருந்த பெண்ணை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் நிர்வாகிகள் பரக்கத் அலி மூலமாக மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாச்சா அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கடலூருக்கு அனுப்பி குடும்ப உறுப்பினர்கள் தகவல் தெரிவித்து வரவைத்து ஷர்மிளாவின் தாயார் அவர்களின் பாட்டி மற்றும் உறவினர்களிடம் இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஒப்புதலோடு அன்பாலாயா சிறப்புப் பள்ளி தாளாளர் அ.சவேரியார் ஆசிரியர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டி பேரூர் நிர்வாகிகள் பரக்கத் அலி அப்துல்லா ஜாஸீர் ஆகியோர் முயற்சியில் சர்மிளாவின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் கடலூர் மாவட்டம் கடலூர் ஓட்டி பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் குடும்பத்தினர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளையும் அன்பாலயா அறக்கட்டளை நிர்வாகிகளையும் இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் R.பாலசுந்தரம் அவர்களையும் பாராட்டி நன்றியும் தெரிவித்தனர்