By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்

Last updated: January 30, 2025 10:04 am
January 30, 2025
50 Views
Share
SHARE

கருங்கல் ஜன 28

 

கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் பெத்லகேம் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது.இங்கு 120 மாணவிகள் நர்சிங் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர்.

 

இந்த மாணவிகள் வார்டன்களால் டார்ச்சர், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை, அதிகப்படியான அபராதம், தரமில்லாத உணவுகள் போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஏற்கனவே அங்கு வேலை பார்த்து வந்த ஹாஸ்டல் வார்டனை மாற்றி புதிய வார்டனை நியமித்துள்ளனர்.

 

இது சம்மந்தமாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் மயங்கி விழுந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து நர்சிங் கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதில் பெரும்பாலான மாணவிகள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு போராட்டம் நடப்பதை அறிந்து கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் கல்லூரியில் எந்த சம்பவமும் இல்லை எனக் கூறி போலீசாரை உள்ளே விடவில்லை என கூறப்படுகிறது. கடும் பிரச்சினைக்குப் பிறகே போலீசாரை உள்ளே அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து குளச்சல் ஏஎஸ்பி பிரவீன்கெளதம், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

மாணவிகளின் குறைகளை கேட்ட தாசில்தார் மற்றும் ஏஎஸ்பி மாணவிகளிடம் உங்களின் குறைகள் அனைத்தும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், புதிய வார்டனை உடனடியாக மாற்றி பழைய வார்டன் நியமிக்கப்படுவார் எனவும், மற்ற குறைகளை வரும் வெள்ளிக்கிழமை தாசில்தார் மற்றும் ஏஎஸ்பி தலைமையில் கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் அனைவரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே தனியார் ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா: சுற்றி வளைத்த போலீஸ்
ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா
மதுரையில் பதினெட்டாம் படி சிலம்ப அகாடமியின் மூன்றாம் ஆண்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது.
இளைஞரணி சார்பில் பரமக்குடியில் 15 லட்சம் மதிப்பீல் கலைஞர் நூலகம்
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது

September 30, 2024
35 Views
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி
புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனை
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்
வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account