தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக ஆ.இரவிச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த.ச. அஜய் சீனிவாசன் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை இணை ஆணையாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தஞ்சாவூர் அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை செயல் அலுவலராக பணியாற்றி வந்த. ஆ. இரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக ஆ.இரவிச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.