மதுரை ஜனவரி 23,
மதுரை அழகர் கோயிலில் தைலக்காப்பு சம்ப்ரோஹணம்
மதுரை மாவட்டம் அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நடைமுறை பழக்கவழக்கப்படி, மூலவர் அருள்மிகு பரமஸ்வாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர்க்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய தைலப் பிரதிஷ்டை செய்வது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மூலவருக்கு பூமாலை, பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், ஆராதனைகள் எதுவும் நடைபெறாது என பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஆகவே தை மாதம் அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய (27.01.2025 முதல் 24.07.2025 வரை ) நித்தியபடி மாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்துப்படி அனைத்தும் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாளுக்கு (கள்ளழகர்) மட்டும் நடைபெறும். எனவே பக்தர்கள் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாளை தரிசித்து அருள்பெற வேண்டுமாய் திருக்கோயில் துணை ஆணையர் செயல் அலுவலர்
செல்லத்துரை மற்றும் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 29.01.2025 தை 16ம் தேதி தை அமாவாசையன்று புதன்கிழமை காலை 09.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறவுள்ளது