By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாரூர் மாவட்ட மக்கள் தனது நெஞ்சார்ந்த நன்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் மாவட்ட மக்கள் தனது நெஞ்சார்ந்த நன்றி
மாவட்டம்

திருவாரூர் மாவட்ட மக்கள் தனது நெஞ்சார்ந்த நன்றி

Last updated: January 23, 2025 9:22 am
January 23, 2025 23 Views
Share
SHARE

“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட குடும்பஅட்டைதாரர் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி மக்களுக்கான அரசாக செயல்படும்  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசுக்கு –  திருவாரூர் மாவட்ட மக்கள் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

 

 

 

 தமிழ்நாடு முதல்வர்  தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மக்களை தேடி நலத்திட்டங்களை வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை உருவாக்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை அறிந்து, அதை காலத்தில் நிறைவேற்றி வருகிறது. அரசு பொறுப்பேற்றவுடன் மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், புதுமை பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என பல்வேறு மக்கள் நலன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் பொது விநியோகத்திட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமானவையாகவும், நியாயமான விலையில் வழங்கி வருகிறது. 

 

 

அந்தவகையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பதினை கருத்தில் கொண்டு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து தொடங்கி வைத்தார்கள்.

 

திருவாரூர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 789 (595 முழுநேர நியாய விலைக்கடைகளும் மற்றும் 194 பகுதிநேர நியாய விலைக்கடைகளும்) நியாயவிலைக்கடைகள் வாயிலாக திருவாரூர் மாவட்டத்தில் புழகத்தில் உள்ள மொத்தம் 3,92,203 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பு 2025 விநியோகம் செய்யப்பட்டது.  இப்பரிசு தொகுப்பினை பெற்ற பயனாளிகள் முகமலர்ச்சியோடு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

 

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பின் கீழ் பயனடைந்த திருவாரூர் பகுதியினை சேர்ந்த நளினி கூறுகையில், 

நான் கூலி வேலை செய்து, அதில் கிடைக்ககூடிய வருமானத்தை கொண்டு எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். இந்நிலையில் பொங்கல் பண்டிக்கையினை எவ்வாறு குழந்தைகளுடன் கொண்டாடுவது என நினைத்து வருத்தப்பட்டிருந்த நிலையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்;பு வழங்கி எங்களை போன்ற மக்கள் பொங்கல் பண்டிகையை மிகச்சிறப்பாக கொண்டாடுவதற்கு வழிவகையை செய்து தந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

 

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் தேவர்கண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த அம்பிகா கூறுகையில்,

நான் தேவர்கண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர். நான் சுயதொழில் செய்து வருகிறேன். அவ்வப்போது 100நாள் வேலைக்கு செல்வேன். கிடைக்கின்ற வருமானத்தில் எனது தேவைகளை நிறைவேற்றி வருகிறேன். இந்த ஆண்டு பொங்கலை எவ்வாறு கொண்டாடுவது, என் போன்ற சாதாரண மக்கள் பொங்கல் திருநாளை கொண்டாட வழிவகை இல்லாத நிலை உள்ளதே என வருத்தப்பட்டு கொண்டிருந்தேன்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்;பு வழங்கப்பட்டது. எங்களைப்போன்ற சாதாரண மக்களின் நிலையை கருத்தில் கொண்டு நாங்களும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டதை செயல்படுத்திய தமிழ்நாடு முதல்வர்க்கு எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

 

  

தொகுப்பு:

                       

மீ.செல்வகுமார், பி.காம்., பி.எல்., 

         செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

       செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

  திருவாரூர்

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

May 12, 2024 95 Views
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 25-வது மாவட்ட மாநாடு
இ.எஸ்.ஐ. நிறுவனம் வழங்கிய ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் அரியலூர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பாக பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?