ஈரோடு ஜன 15
ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தைப்பொங்கலை ஒட்டி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு பெரியார் மன்றத்தில் தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜீவா தங்க வேல் வரவேற்றார் இதில் 22 தாலுகா நிருபர்கள் உட்பட மொத்தம் 100 பேருக்கு வேட்டி சேலை மற்றும் பொங்கல் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன .
பத்தாவது ஆண்டாக நடந்த இந்த நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு பொங்கல் பரிசுகளை வழங்கினார். முடிவில் பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.