ஜன:16
திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின் போது சமத்துவ பொங்கல் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது .அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 27 வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சார்ந்த 5000 பெண்கள் கலந்துகொண்டு சூரிய பொங்கல் வைத்தனர் . இந்நிகழ்வை மதிமுகவின் மாநில தொண்டர் அணியின் அமைப்பாளர்.
பாஸ்கர சேதுபதி,சென்னை பெரு நகர மாமன்ற மதிமுக உறுப்பினர்.ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் சீர் வரிசை கொடுத்து
துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து பெண்கள் கும்மிப்பட்டு பாடி பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.ஊர் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வை காண திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.