தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியறு அணைக்கட்டில் சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. உடன் திட்ட இயக்குனர் ( மகளிர் திட்டம்) லலிதா, வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குனர் சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் மரிய ரவி, ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் ,உதவி சுற்றுலா அலுவலர் கதிரேசன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, உதவி பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம்) கிருபா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்,விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.



