நாகர்கோவில் ஜன 10
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள். பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில் இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025-ன் கீழ் ரூ.90 இலட்சம் மதிப்பில் இறச்சகுளம் முதல் துவரங்காடு வரை 1.6 கி.மீட்டர் நீளத்திலும், 7 மீட்டர் அகலத்தில் சாலையை விரிவாக்கி, தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, இத்தார்சாலையின் தரத்தினை ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்டறியப்பட்டதோடு. சாலை தரமானதாக இருக்கவும். பணியினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.