ஆரல்வாய்மொழி ஜன 7
தடிக்காரன்கோணத்தில் 7 ஸ்டார் சீருடை பணியாளர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 பேருக்கு மத்திய துணை ராணுவ படையில் பணியிடம் கிடைத்துள்ளது. அரசு பணி கிடைத்த 6 பேருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பாராட்டு பட்டயம் மற்றும் சான்றிதழ்களை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வழங்கி வாழ்த்தி பாராட்டினார்.
தடிக்காரன்கோணத்தில் 7 ஸ்டார் சீருடை பணியாளர் பயிற்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயிற்சி பெற்று மத்திய அரசு தேர்வாணயம் 2024-ம் ஆண்டு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று இந்திய துணை ராணுவ படை பிரிவில் எல்லை பாதுகாப்பு படையில் முத்துபாண்டியராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேகர், முகேஷ் ஆகியோரும், மத்திய ரிசர்வ் போலிஸ் பிரிவில் நலின்பாரதி, பிரவின், ஆகியோரும், மத்திய ஆயுதப்படை பிhவில் எம்.பாலாஜி ஆகியோருக்கு அரசு பணியிடம் கிடைத்துள்ளது. அரசு பணியிடம் கிடைத்த 6 பேருக்கு பாராட்டு விழா தடிக்காரன்கோணம் லாசர் பாலம்மாள் திருமண மண்டபத்தில் 7 ஸ்டார் சீருடை பணியாளர் பயிற்சி மைய நிர்வாக இயக்குநர் ஜெசிகா ஜெயன் தலைமையில் நடைபெற்றது. இதில்
தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பணி கிடைத்த 6 பேரை பாராட்டி சால்வை அணிவித்து பட்டயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியை சுரிஜா வரவேற்று பேசினார், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் மேரி ஜாய், முன்னாள் வார்டு உறுப்பினர் அஜன், தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை இணைச் செயலாளர் பகவதியப்பன், சமூக ஆர்வலர் ராஜாசிங், கிளை கழகச் செயலாளர் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை அமிசா நன்றி கூறினார்.



