ஆரல்வாய்மொழி, ஜன.05:
தோவாளை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
தோவாளை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழாவினை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு மேள தாளங்கள் முழங்க கோலாட்டம், கும்மியாட்டத்துடன் பக்தர்கள் திருமண சீர்வரிசைப் பொ ருட்களுடன் கோவில் ரதவீதி சுற்றி திருக்கோவிலை வந்தடைந்தது காலை 9. மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஹேமங்கள் வளர்த்து திருமண பூஜை தொடங்கியது காலை 10 மணிக்கு ஆண்டாள் ரங்கமன்னார் திருமாங்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார். மேலும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இடையிடையே பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்சிகளில் பக்தர்கள் சேவ சங்க தலைவர் கண்ணன், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவத்யப்பன், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் , துணைத் தலைவர் தாணு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.