திண்டுக்கல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சனநாயக பேரவையின் புத்தாண்டை முன்னிட்டு மத நல்லிணக்க மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாவேந்தர் கல்வி சோலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ரோக்கஸ்வளவன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு மண்டல துணைச் செயலாளர் வ. அன்பரசு, மாவட்ட தொண்டரணி மு.ரமேஷ் ,மாவட்ட செய்தி தொடர்பாளர் அ. சுவீட்ராஜா முன்னிலை வகித்தனர்.கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் அ.பிரேம்ராஜா வரவேற்பு உரையாற்றினார்.
இவ்நிகழ்ச்சிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் கலந்து கொண்டு
மத நல்லிணக்க உறுதிமொழியை எடுத்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் விமலா சேவியர் MC , சமூக ஆர்வலர் உமர். மரைக்காயர் சேட் , தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.வீரபாண்டியன், திருவள்ளுவர் இலக்கிய பேரவை செயலாளர் இரா. கணேசன், திருக்குறள் பேரவை மாநில பொருளாளர் பாவலர் க.சிவகுமார், தி.க.நிர்வாகி கருணாநிதி, தொழிலதிபர் சி.ரூபன், சமூக ஆர்வலர்கள் ஆரோக்கியம் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஓவியரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் முரசு நன்றி கூறினார்.