டிச. 31
உடுமலையில் மாற்று கட்சியை சேர்ந்த 100 பேர் தமிழக வெற்றி கழகத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர். தாராபுரம் ரோடு பகுதியில் 70 அடி உயரத்தில் கட்சி கொடியை ஏற்றிய பின் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் காமராஜர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் ராமன், மகளிரணி தலைவி சரண்யா, நகர செயலாளர் காஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.