திருப்பத்தூர்:டிச:31,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்ன காளி அனைவரையும் வரவேற்று பேசினார். அண்ணல் அம்பேத்கர் சிலை கமிட்டி தலைவர் தயாநிதி, சமூக சேவகர் விளையாம்பட்டு மணிவண்ணன், அம்பேத்கர் சிலை நிறுவனர் ஜார்ஜ் பேட்டை பன்னீர்செல்வம், நகர தலைவர் இளங்கோ நகர இளைஞரணி தலைவர் கோபி ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச் செயலாளர், தேசிய செயலாளர், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் ஏலகிரி எச்.கோபிநாதன் மற்றும் மாநில துணைத் தலைவர் ஆம்பூர் சி.தனசேகரன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை எழுப்பியபோது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மேலும் நாடாளுமன்றத்திலும், ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக போராடி தியாகம் செய்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய வரை, ” இப்போதெல்லாம் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வது பேசனாகிவிட்டது! அவர் பெயரை கூறுவதை விட்டுவிட்டு கடவுளை வணங்கினால் புண்ணியமாவது கிடைக்கும்! என்று பேசியது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமூக மக்களின் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விதமாக பேசியது கண்டனத்திற்குரியது. அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதை நாடாளுமன்ற அவையில் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் அனைவரும் போராட வேண்டும். இந்நிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி, அமித்ஷா பதவி விலக வேண்டும் என இந்திய குடியரசு கட்சியினர் கோசங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயல் தலைவர் ஊத்தங்கரை சிவா, மாநில துணை தலைவர் தனசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஜார்ஜ், மாவட்ட பொறுப்பாளர் திருஞானம், நகர பொறுப்பாளர் நெடுமாறன், ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், சமூக ஆர்வலர் அலி, பேராம்பட்டு நீலவேணி, மாவட்ட பொறுப்பாளர்கள், திருப்பத்தூர் நகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் என 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.