திண்டுக்கல்லை மையமாகக் கொண்டு கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கம் என்ற பெயரில் கிராம ஊரக மக்களின் அரசு வேலை கனவை நினைவாக்க போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களையும் மேலும் இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், தொழில் முனைவோர்களை உருவாக்குவது, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வழிகாட்டுவது உள்ளிட்ட சேவைகளை சிறப்பாக தமிழகம் முழுவதும் செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்க நிர்வாகிகளுக்கு கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மாநிலத் தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி அவர்களுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது மாநில ஆலோசகர் அற்புத மணிக்கு சிறந்த சமூக சேவகர் விருதும் மாநில துணைத்தலைவர் ராயப்ப ரமேஷ்க்கு சிறந்த மக்கள் பிரதிநிதி விருதும் மாநில துணைத்தலைவர் ராக்சன்க்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கி கௌரவித்தனர் மேலும் இவ்விழாவில் தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டனர்.



