டிச. 30
பிரதமராக 10 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய மன்மோகன் சிங் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அதிகம் பேசாமல் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்தவர். உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்.
அண்ணா பல்கலை கழக மாணவி சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உணர்வோடு நாமும் கலந்துள்ளோம்.
முன்னாள் பிரதமர் உயிரிழந்த நிலையில் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். பலர் வெளிநாடுகளில் பயின்று மேம்பட்ட அரசியலை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் இவர் சாட்டையால் அடித்துக் கொள்கிறார். கவுண்டமணி சாட்டையால் அடித்துக் கொள்வதை போல உள்ளது. இதனை தமிழக மக்கள் மட்டுமல்லாது பாஜக வினரே இதனை ஏற்க வில்லை. காமெடி நடிகர் எஸ்.வி.சேகரே இவரை கோமாளி என்கிறார். சாட்டை என்ற பெயரில் சேட்டை செய்கிறார்.
இந்த கோவம் நியாயமானது. ஆனால் இதே போன்று மணிப்பூர் போன்ற மற்ற நிகழ்வுகளுக்கு கோவத்தை காட்டவில்லை. பாதிப்பு, அநிதி யாருக்கு நடந்தாலும் அதில் பேதம் பார்க்க கூடாது.
அவரின் குறுகிய மனநிலையை இந்த சம்பவம் காட்டுகிறது. திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என தெரிவித்துள்ளார். அவர் வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது. நாட்டுக்கு பணியாற்றியவர்களை குறுகிய வட்டத்துக்குள் பார்க்க கூடாது. அம்பேத்கர் ஒரு மாமேதை. இந்த விஷயத்தில் அதானி விவகாரம் மறைக்கப்பட்டுள்ளது.
தலைவர்களை திரையரங்கில் தேடுவதை விட களத்தில் தேடுங்கள் என்பதே எங்கள் கொள்கை. ஆனால் தமிழகத்தில்
விஜயின் அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலர் நேரில் சென்று நிவாரணம் வழங்கினர். ஆனால் இவர் பனையூருக்கு அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். எம்.ஜி.ஆர். கூட இதனை செய்யவில்லை. விஜயின் அரசியல் மேட்டுக்குடி அரசியலாக உள்ளது.
2026ல் 5 முனை போட்டி இருக்கும் என்றாலும் திமுக அரசு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.
போதை கலாச்சாரம் பரவி வருவது ஆபத்தானது. இந்த விஷயத்தில் திமுக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.