மதுரை டிசம்பர் 23,
மதுரையில் தேசிய கணித நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
மதுரை மாவட்டம் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக_194_ ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை மேலூர் மெயின் ரோட்டில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். உறுப்பினர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆலோசகர் பிரபு தொகுத்து வழங்கினார். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு குழந்தைகள் நலினா, ரித்திகா ஸ்ரீ, புவனி பாரதி ஆகியோர் திருக்குறள் சொல்லி நிகழ்வை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணிமாறன் கலந்து கொண்டு மரங்களின் பயன்கள், காற்றின் அவசியம், சுற்றுச்சூழல், அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் விதம் ஆகியவை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். தேசிய கணித நாளை முன்னிட்டு கணித மேதை ராமானுஜர் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்விற்கு தேவையான புங்கை, பூவரசு, மந்தாரை மரங்கள் மற்றும் வலைகளை ராகேஷ் வழங்கினார். விழாவில் ஆலோசகர் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, சமூக ஆர்வலர் ஜஸ்வர்யா, அசோக் குமார், இதயபிறவி பிரசாந்த், பாஸ்கரன், ரமேஷ், பரமேஸ்வரன், ஓகே சிவா, ஆடிட்டர் சுரேஷ் குமார், அண்ணாமலை, ஸ்டெல்லா மேரி, அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரங்கள் நடப்பட்டது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி ரித்திகா ஸ்ரீ நன்றி கூறினார்.