திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டாரம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தாடிக்கொம்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரிலும் திண்டுக்கல் சுகாதார மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஆர்.செல்வகுமார் அறிவுரையின் பேரிலும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்.
அ.சீனிவாசன் தலைமை தாங்கி மருத்துவ முகாமின் திட்ட விளக்க உரையாற்றினார். தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் தலைவர் கவிதா சின்னத்தம்பி, கவுன்சிலர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தனர். இம்முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம்,பல் காது, மூக்கு ,தொண்டை , சித்த மருத்துவம், HIV பரிசோதனை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், காசநோய் போன்றவைகளுக்கான மருத்துவ பரிசோதனைகளுடன் இருதய நோய் , சர்க்கரை நோய், புற்றுநோய் முதியோருக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மருத்துவ அலுவலர் மருத்துவர். சிவசுப்பிரமணியன் தலைமையில் மருத்துவர்கள் சசிகுமார், பிரித்திகா, அம்ரிதா, ரஞ்சனி ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சமுதாய சுகாதார செவிலியர் சுபாஷினி, பகுதி சுகாதார செவிலியர் காந்திமதி, சுகாதார ஆய்வாளர்கள் மலையரசு, பார்த்திபன், கிராம சுகாதார செவிலியர்கள் பவுல் மேரி, ஜாக்குலின் , வித்யா, முருகேஸ்வரி, ஆய்வக நிபுணர் வாசுகி இடைநிலை சுகாதார செவிலியர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.