கடையநல்லூர் டிசம்பர்,5
தென்காசி மாவட்டம்
வாசுதேவன்நல்லூர் அருகே ஏமன் பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவருடைய மனைவி ஜோதிலட்சுமி (37). இவர்களுக்கு பிரியா (22), வெண்ணிலா (20), சுமித்ரா (17) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்
கடையநல்லூர் அருகே கர டிகுளம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் கணேசன் குடும்பத்தினரு டன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
கடந்த 21-ந்தேதி கணேசன்- ஜோதிலட்சுமி தம்பதியர் வழக்கம்போல் வேலை செய்து விட்டு கோழிப்பண்ணையில் இரவு காளான் குழம்பு வைத்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு பண்ணையில் உள்ள வீட்டில் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகி யும் அவர்கள் வெளியே வரா ததால் போலீசாரை வரவைத்து கதவை உடைத்து பார்த்தபோது ஜோதிலட்சுமி இறந்து கிடந்தார் அவரின் கணவர் கணேசன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு நாள் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இழந்த அவர்களின் குடும்பத்தாருக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் மா.செலத்துரை ஏமன்பட்டிக்கு நேரில் சென்று மூன்று பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூறி ரூபாய் 10,000 நிதி உதவி வழங்கினார் அப்பொழுது கடையநல்லூர் ஒன்றிய துணை சேர்மன் ஐவேந்திரன்தினேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி , மாவட்ட பிரதிநிதி வக்கீல் சதீஷ், ஏமன்பட்டி கிளைச் செயலாளர் ஜேம்ஸ் திரிகூபுரம் துணைத் தலைவர் சையது மீரான், நயினாரகரம் குமார், நல்லையா, மதி ஆகியோர் உடன் இருந்தனர்