களியக்காவிளை, டிச- 3
புதுக்கடை அருகே முக்காடு பகுதியை சேர்ந்தவர் ஷிஜு (36). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் களியக்காவிளை அடுத்த குறுமத்தூர் பகுதியை சார்ந்த ஜனுஷா என்பவரை திருமணம் செய்து மனைவி வீட்டில் வசித்து வந்தார். ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மதியம் விட்டில் அறைக்குள் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அறைக் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஜனுஷா அறைக்கதவை தட்டி உள்ளார். ஷிஜூ கதவை திறக்காததால் பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதை அடுத்து களியக்காவிளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ஷிஜு ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்