நாகர்கோவில் – நவ – 30,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இளங்கடை பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் உத்திர பிரதேச மாநிலத்தில் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை சுட்டு படுகொலை செய்யப்பட்ட உத்திர பிரதேச பாசிச பிஜேபி அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில்
நாகர்கோவில் மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினார். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அமீர் காண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எஸ்டிபிஐ
மாவட்ட துணை தலைவர் ஜாகீர் உசேன் , ஒய்எம்ஜெ. மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது மஹலரி, மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் பிஜுருல் ஹபீஸ் , நாம் தமிழர் தாகிர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மஜக துணை பொதுச் செயலாளர் காயல் ஏ.ஆர் . சாகுல் ஹமீது, பச்சை தமிழாக்கம் கட்சி நிறுவனத் தலைவர் சுபா. உதயகுமார் சிறப்பு கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அபுதாஹிர், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் சம்மில், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசிர் அரஃபத், நாகர்கோவில் மாநகரப் பொருளாளர் வேல்முருகன்,
நாகர்கோவில் மாநகரத் துணைச் செயலாளர் இடலை.சாகுல் நன்றி உரை ஆற்றினார். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



