ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 51 விசைப்படகுகள் மற்றும் ஏழு நாட்டுப் படகுகளுக்கான மீனவர்களுக்கு ரூபாய் 3.20 கோடி மதிப்பீட்டில் நிவாரண நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் வழங்கினார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உடன் இருந்தார்.



