கடையநல்லூர் நவ 21
கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி முறையான அளவீடுகள் செய்யாததால் ஆக்கிரமிப்பதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக சாக்கு போக்கு சொல்லி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தட்டிக் கழித்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கணபதி பாலசுப்ரமணியம் கூறுகையில் தமிழக அரசின் அரசு நிர்வாக இயந்திரங்களில் திட்டமிடல் என்னும் பயிற்சிகள் அதிகாரிகளுக்கு போதுமானதாக இல்லாததால் அரசு வரிப்பணங்கள் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன முறையாக ஒரு முடி திருத்தும் கடைக்கு நாம் செல்ல வேண்டுமானால் நம்மில் முடி அதிகம் வளர்ந்திருந்தால் தான் அந்த கடைக்கு சென்று அப்பணிகளை திருப்திகரமாக முடித்து வரமுடியும் ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் ஆக்கிரமிப்பு பணிகள் நடத்துவதாக கூறி பின் ஏனோதானோ? என்ற அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக பாசாங்குசெய்து விட்டு அதற்காக நகராட்சி அளவீடு செய்யவில்லை அதனால் தான் முறையான ஆக்கிரமிப்புகள் அகற்ற முடியவில்லை என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாக்கு போக்கு சொல்லி வருவது ஒட்டுமொத்தத்தில் அரசாங்க வரிப்பணத்தை பாழ்படுத்தியதோடு மட்டுமின்றி பொது மக்களையும் ஏமாற்றி வருகின்றனர் என்று தெள்ளத்தெளிவாக திட்டவட்டமாக தெரிய வருகிறது நகராட்சி அளவீடு செய்ய வில்லை இல்லை என்றால் யாரை திருப்தி படுத்துவதற்காக இந்த அவசர கோல ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள்… இதற்கெல்லாம் தேசிய நெடுஞ்சாலை துறை தான் இதற்கு தெளிவான விளக்கத்தை தர வேண்டும் மூன்று துறை அதிகாரிகளும் கூடி ஆக்கிரம்பை ஆற்றுவதற்கு முன்கூட்டியே ஏன் திட்டமிடப்படவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த பொதுநல அமைப்பு மற்றும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது இது போன்ற மக்கள் வரிப்பணத்தை பாழ்படுத்தும் அதிகாரிகள் நிச்சயமாக நீதிமன்றம் முன்பு நிறுத்தப்படுவர் என்பதையும் இதன் மூலம் எச்சரிக்கையாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார் மொத்தத்தில் கடையநல்லூரை பொறுத்தவரையில் வருவாய், காவல், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிக்கு என பல்வேறு வகையில் திரைமறைவுகளில் உதவி கரம் புரியும் வியாபாரிகள் தங்களுக்கு சாதகமான ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்க அதிகாரிகளை நல்ல முறையில் கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது அதனால்தான் என்னவோ அரசியல் ஆளுமைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பு போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கின்ற விளம்பர பதாகைகள் மற்றும் பல்வேறு ஆக்கிரமங்களை அகற்றாமல் கண் போன போக்கிலே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்டமிடாமல் தொடர்ந்து அலட்சியத்தை காட்டிக் கொண்டு வந்தால் அதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விரும்பத்தகாத எதிர்பாராத விபத்துக்கள் மற்றும் உயிர் சேதங்களுக்கு மேற்கண்ட நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள் எனவும் பொதுமக்கள் ஒருவித குமுறலுடன் தங்கள் ஆத்திரம் மூங்கில் ஆவேசங்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் பழைய திருடி கதவ துரடி என்ற பழமொழி சொல்லுக்கு ஏற்ப தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் குறிப்பாக சார்பதிவாளர் அலுவலக வாயிலின் இரு பக்கமும் மீண்டும் கடைகள் அமைக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. அப்படி அரசு அலுவலகம் முன்பு அங்கு வரும் பயனாளிகளுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்த முடியாமல் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடருமானால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிச்சயமாக நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்படுவர் என்பதையும் இதன் மூலம் பொதுநல அமைப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு தெரிவித்து வருகின்றனர்