கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான ஜிம்மாண்டியூர், சுண்டகாபட்டி, கண்ணன்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி விவசாயம் நடந்து வருகிறது. பெரும்பாலும் ரெட் லேடி என்னும் பப்பாளி ரகத்தை பயிரிட்டுள்ள விவசாயிகள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். சராசரியாக கிலோ ரூ.30 விற்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடம் மழையின் காரணமாக பப்பாளி வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் பப்பாளி பழங்கள் மரத்தில் பழுத்து கீழே விழுகிறது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நகரங்களில் மருத்துவர்களின் பரிந்துரை பப்பாளியாக இருப்பதே காரணம் என வியாபாரி கூறியதாக வியாபாரிகள் வந்து வாங்காததால் பப்பாளி மரங்களிலே விட்டு விடுகின்றனர் ஜிம்மாண்டியூர் கிராமத்தில் பப்பாளி விவசாயம் செய்து வரும் விவசாயி வளர்மதி மாரியப்பன் தெரிவித்தார். சராசரியாக ரூ.12 முதல் ரூ30 ரூபாய் வரை விற்கப்படும் ஆனால் மழையின் காரணமாக இந்த வருடம் கிலோ ரூ.5க்கு வாங்க வியாபாரிகள் வராததால் வியாபாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன சுமார் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்ச ரூபாய் செலவு செய்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றன இந்த நிலையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்



