தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சியில் ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்லைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீ குமார் , ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், துணைத்தலைவர் செல்வக்கொடி ராஜாமணி, தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்யாண ராம சுப்பிரமணியன், அலிஸ் தாயம்மாள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.



