நாகர்கோவில் நவ 13
குமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – காலாவதியான தகுதிச் சான்று, காப்பீடு சான்றுடன் இயக்கப்பட்ட லாரி, ஆட்டோ பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது, காலாவதியான தகுதிச் சான்று, முடிவுற்ற காப்பீடு சான்றுடன் இயக்கப்பட்ட லாரி, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் மேல் நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது