தென்காசி மாவட்டம் கடலூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு சாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாமகவினர் மனு வழங்கினர்.
கடந்த 3-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் புவனகிரி அருகே உள்ள மஞ்சகொள்ளை கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி செல்லத்துரை என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இளைஞர்களால் தாக்கப்பட்டார். அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் இச்சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி அங்கு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 4 – ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டி விடுவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையினை இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அதன்படி தென்காசி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மாவட்ட தலைவர் குலாம், தென்காசி சட்டமன்றத் தொகுதி தலைவர் சுந்தர் ஆகியோர் முன்னிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டது.
புகார் மனுவில் பா.ம.க-வின் கொள்கையினை இழிவுப்படுத்தியும், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டி விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சமூக ஒற்றுமைக்கு எதிராகவும் சாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் ஈடுபட்ட
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நீதி வள்ளல், அரங்கதமிழ் ஒளி, அறிவுடை நம்பி, செல்வராணி, தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கெய்சர் அலி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருமலைக்குமார், நகர செயலாளர்கள் சங்கரநாராயணன், செண்பகக்குமார், பக்கீர் மைதீன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, சந்திரசேகர், சண்முகசுந்தரம், ஒன்றிய தலைவர்கள் தண்டபானி, இசக்கிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.



