தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன் விருப்ப நிதியிலிருந்து இப்பள்ளியின் 105 மாணவர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் ரூ.1.05 இலட்சம் மதிப்பில் அஞ்சலக சேமிப்பு வைப்புத்தொகையை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் முன்னிலையில் வழங்கினார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவள்ளி,, நகர்மன்றத் தலைவர் மா.இலட்சுமி, கைம்பெண் நல வாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, வட்டாட்சியர் சண்முகசுந்தரம், பள்ளி தலைமையாசிரியர் தே.ஜெனிலாஜோன்ஸி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்



