ஈரோடு மாவட்ட தொழிலாளர் துணை ஆணையாளராக இருப்பவர் முருகேசன். இவர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பாக ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்று உள்ளார். இதையொட்டி அவருக்கு கோவை பாரதியார் பல் கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கவர்னர் ரவி பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 2 வது முறையாக இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.



